அணைப் பிரச்சினையில் மலையாளிகளின் வன்முறையைக் கண்டித்து மதுரையில் 22ம் தேதி முழுஅடைப்பு!
மதுரை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரளாவில் தமிழர்களுக்கு எதிராக இனவெறியுடன் கூடிய வன்முறையில் மலையாளிகள் ஈடுபடுவதைக் கண்டித்து மதுரையில் 22ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாசம் கூறுகையில்,
மதுரை உட்பட ஐந்து மாவட்ட குடிநீர், விவசாய நீராதாரமாக பெரியாறு அணை உள்ளது. அருகில் உள்ள இடுக்கி அணைக்காக, கேரள அரசு பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைத்துவிட்டது. இதனால், மதுரை உட்பட 5 மாவட்டங்கள் பாதித்துள்ளன.
மேலும், சமீபத்தில் 120 அடியாக குறைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டது. எனவே, பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் நிரப்பவும், தமிழக அரசின் தீர்மானத்துக்கு வலுசேர்க்கவும் மதுரையில் டிச. 22 ம் தேதி கடையடைப்பு நடத்தப்படும்.
இதில் பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் கலந்து கொள்கின்றன. அன்று மடீட்டிசியா அருகே உண்ணாவிரதமும் நடைபெறும். மாவட்ட அளவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்குப்படவுள்ளது.
ஆட்டோ, கார், டாக்ஸி உள்பட பல்வேறு அமைப்புகளிடமும் ஒத்துழைப்பு கேட்டுள்ளோம் என்று கூறினார்.
5 மாவட்டங்களில் முழு கடையடைப்பு
இதேபோல, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேல் விடுத்துள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு, கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
நதிகளை தேசியமயமாக்கி, இருமாநில சம்பந்தப்பட்ட அணைகளுக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும். தமிழர்களின் உணர்வை மத்திய, கேரள அரசுகளுக்கு தெரிவிக்கும் வகையில், மதுரை உட்பட 5 மாவட்டங்களிலும் முழுக்கடையடைப்பு, உண்ணாவிரதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications