கட்சியிலிருந்து சசிகலா நீக்கம்- அதிமுகவினர் பெரும் உற்சாகம்-மொட்டை அடித்துக் கொண்டாட்டம்
திருப்பூர்: அதிமுகவை விட்டு சசிகலாவை முதல்வர் ஜெயலலிதா நீக்கியுள்ளதால் அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.
ஜெயலலிதாவின் நிழலாக திகழ்ந்து வந்த சசிகலாவை இன்று அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதாவின் செயல், அதிமுகவினரிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதேசமயம், சசியின் ஆதிக்கத்தால் கடும் புழுக்கத்தில் இருந்த அதிமுகவினருக்கு பெரும் சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.
சசிகலா நீக்கப்பட்டார் என்ற செய்தி பரவியதும் மாநிலத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் அதைக் கொண்டாடியுள்ளனர்.
திருப்பூரில் எம்.ஜி.ஆர். சிலை முன்பு கூடிய அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். பின்னர் எம்ஜிஆர் சிலை முன்பு அமர்ந்து மொட்டை போட்டுக் கொண்டனர். இனிப்புகளையும் வழங்கினர்.
இதேபோல திண்டிவனத்திலும் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.
இருப்பினும் சசிகலாவின் பெல்ட் ஆன மன்னார்குடி உள்ளிட்ட தஞ்சை மாவட்டப் பகுதிகளில் அமைதி காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications