சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகரில் உள்ள ராமச்சந்திரன் வீடு, தியேட்டர், நூற்புமில், ஜவுளிக்கடை, மகள், மகன் வீடுகள், மைத்துனரின் வீடு உள்பட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள மகன், மகள், மருமகன் வீடுகளிலிலும் ரெய்டு நடந்து வருகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள சாத்தூர் ராமச்சந்திரன் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
சட்டப்படி எதிர்கொள்வோம்
லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள ராமச்சந்திரன், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார். அரசு ஆட்டுவிக்கிறது. அதற்கேற்ப அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். இதற்கு அதிகாரிகளை குறை சொல்ல முடியாது. இந்த நடவடிக்கைகளை நாங்கள் தலைவர் கலைஞர் தலைமையில் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications