ராஜஸ்தானில் 5000 மருத்துவர்கள் ராஜினாமா! - 12 பேர் உயிரிழப்பு
ஜெய்ப்பூர்: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ராஜாஸ்தான் மாநிலத்தில் 5 ஆயிரம் அரசு மருத்துவர்கள் தங்களின் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
பலஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டும், சரியான முறையில் பணி உயர்வு வழங்கவேண்டும் என்பது ராஜஸ்தான் மாநில அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி கடந்த 21ம் தேதி முதல் நான்கு நாட்களாக அவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நோயாளிகள் தவிப்பு
மருத்துவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
5ஆயிரம் பேர் ராஜினாமா
அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆசிரியர்கள் இன்று சுமார் 4 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தும் வகையில் சுமார் 5 ஆயிரம் மருத்துவர்கள் இன்று தங்களது பணியை ராஜினாமா செய்தனர்.












Click it and Unblock the Notifications