ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்- ஒழுங்கு நடவடிக்கை ஆணையரானார் உமா சங்கர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த திமுக ஆட்சியின்போது ஓரம்கட்டப்பட்டு நெருக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் உள்ளிட்ட மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சந்தோஷ் பாபு தோட்டக்கலைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முருகைய்யா நகர்ப்புற நில நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உமாசங்கர் சென்னை ஒழுங்கு நடவடிக்கை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஓரம் கட்டி வைத்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications