Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரூப் 2, விஏஓ தேர்வுகளில் வென்றவர்களுக்கு 6 வாரத்திற்குள் வேலை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் 2010 ஆம் ஆண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் விஏஓ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த

உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுகுணா, குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு தனித்தனியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கிராம நிர்வாக அதிகாரிகள்

இதேபோல் கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. எனவே அவர்களுக்கும் பணி நியமான ஆணை வழங்கவேண்டும் என்று நீதிபதி சுகுணா தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

6 வார காலத்திற்குள் இவர்களுக்கு வேலை தர வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+