உலகை உலுக்கிய ஜப்பான் சுனாமி- கூடங்குளத்தில் வெடித்த புகுஷிமா!
2004ம் ஆண்டு ஆசிய நாடுகளைத் தாக்கிய சுனாமி கோரத் தாக்குதலின் அதிர்ச்சி மக்களின் மனதில் இன்னும் கூட நீங்காமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு ஜப்பானைத் தாக்கிய கடும் நிலநடுக்கமும், பெரும் சுனாமி தாக்குதலும் மக்களை அதிர வைத்தன.
சுனாமியின் கோரத் தாக்குதலை நேரடியாக டிவிகளில் பார்த்த மக்கள் இதயங்கள் ஒரு நொடி நின்று துடித்தன. மார்ச் 11ம் தேதி அமைதியான மக்கள் வசிக்கும் ஜப்பான் கடலோரப் பகுதிகளை ஆர்த்தெழுந்து தழுவிய சுனாமி அலைகளும், அதற்கு முன்பாக ஏற்பட்ட 8 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கமும் அந்த அமைதி பூமியை ச��ன்னாபின்னமாக்கியது.
ஊருக்குள் புகுந்த கடல் நீர் லட்சக்கணக்கான வீடுகளையும், ஆயிரக்கணக்கான மக்களையும் காவு வாங்கியது.
புகுஷிமா என்ற இடத்தில் உள்ள அணு மின் நிலையத்தை சுனாமி அலைகளும், நிலநடுக்கமும் தாக்கியதால் அந்த அணு மின் நிலையம் பேராபத்தை சந்தித்தது. சில அணு உலைகள் வெடித்துச் சிதறின. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சு அபாயத்திலிருந்து காப்பதற்காக லட்ச்திதற்கும் மே���்பட்ட மக்கள் வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
புகுமிஷா அணை உலைக்கு வந்த ஆபத்து உலகம் முழுவதும் உள்ள அணு மின் எதிர்ப்பாளர்களை பொங்க வைத்தது. இந்த கொதிப்பு கூடங்குளத்தில் இன்று வந்து நிற்கிறது.