எண்ணூரில் ரூ.3,600 கோடி செலவில் புதிய அனல் மின் நிலையம்: ஜெயலலிதா உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Power plant
சென்னை: எண்ணூரில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 3,600 கோடி செலவில் 600 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் நிலையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய அனல் மின் நிலையம் வரும் 2015ம் ஆண்டு இறுதிக்குள் செயல்படத் துவங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், எண்ணூரில் இப்போது செயல்பட்டுவரும் அனல் மின் நிலையத்துக்கு மாற்றாக புதிய அனல் மின் நிலையத்தை நிறுவ முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

எண்ணூரில் 5 அலகுகள் கொண்ட மொத்தம் 450 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் கடந்த 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், இங்குள்ள இயந்திரங்கள் செயலிழந்து வருகின்றன. இதனால், இந்த அனல் மின் நிலையம் முழு உற்பத்தித் திறனுடன் செயல்பட முடியவில்லை.

எனவே, எண்ணூரில் 5 அலகுகள் கொண்ட அனல் மின் நிலையத்தில் உள்ள பழைய மின் உற்பத்தி இயந்திரங்களை அகற்றிவிட்டு, அதே இடத்தில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.3,600 கோடி மதிப்பீட்டில், அதி நவீன தொழில்நுட்பத்துடன் 600 மெகாவாட் திறனுள்ள மாற்று அனல் மின் நிலையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+