கட்சியிலிருந்து விரட்டப்பட்ட இளவரசியின் அண்ணன் ஒன்றிய சேர்மன் பதவியிலிருந்து விலகல்
சென்னை: சசிகலாவின் அண்ணி இளவரசியின் அண்ணன் அண்ணாதுரை, மன்னார்குடி வட்டம், கோட்டூர் ஒன்றிய சேர்மன் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் அதிமுகவிலிருந்தும் விலகியுள்ளார்.
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் லேட்டஸ்டாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அண்ணாதுரை. இவர் சசிகலாவின் அண்ணி இளவரசியின் அண்ணன் ஆவார். இவர் கோட்டூர் ஒன்றியத்தின் செயலாளராகவும், சேர்மனாகவும் பதவி வகித்து வந்தார்.
கடந்த வாரத்தில் ஒன்றியச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்தார்.
இந் நிலையில் தற்போது அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், ஒன்றிய சேர்மன் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளார் அண்ணாதுரை. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனியநாதனுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில் அடியில், பின்குறிப்பு என போட்டு இந்த முடிவை முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார் அண்ணாதுரை.
சில தவிர்க்க முடியாத காரணத்தாலும், சொந்த அலுவல் காரணமாகவும் பதவியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார் அண்ணாதுரை.












Click it and Unblock the Notifications