கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கடைபிடிக்கும் பொறுமையை தமிழகம் பலவீனமாக கருதக்கூடாது என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி சங்கனாசேரியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டுடன் சுமூக உறவு தொடர வேண்டும் என்பது தான் கேரளாவில் உள்ள அனைவரும் விரும்புகின்றனர். தண்ணீர் ஒரு விலை மதிப்பற்ற பொருள் என்பதை தமிழகம் உணர வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு இன்று தண்ணீர் கொடுப்பது போல தொடர்ந்து வழங்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்கள் முல்லைப் பெரியாறு அணையை நம்பிதான் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அதே நேரத்தில் கேரளாவில் உள்ள மக்களின் பாதுகாப்பும் முக்கியமாகும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் கவலையை தமிழ்நாடு கண்டு கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. கேரளாவின் கவலையை தமிழகம் புரிந்து கொள்ளும் என நம்புகிறோம். முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக சில தவறான கருத்துகள் தமிழ்நாட்டில் பரப்பப்படுகின்றன.
கேரளா குறித்து சில தவறான எண்ணங்களும் தமிழ்நாட்டுக்கு உள்ளது. அந்த கருத்துகளை மாற்றுவதற்கு தான் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். அதற்கு உடனடியாக பதிலும வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் சில பத்திரிக்கைகளில் வந்த தவறான செய்திகளை அடிப்படையாக வைத்து தான் அவர் பதில் அளித்துள்ளார்.
கருணாநிதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை போல் கேரளாவில் தமிழர்களுக்கு எதிராக மோசமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கடைபிடிக்கும் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக் கூடாது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு இதுதான் கேரளாவின் நிலைப்பாடு ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications