தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் – நோயாளிகள் பாதிப்பு
சென்னை: தூத்துக்குடியில் பெண் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் சேதுராமலட்சுமியின் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற மகேஷ் என்பவரின் கர்ப்பிணி மனைவி உயிரிழந்தார். இதனையடுத்து சேதுராமலட்சுமி திங்கட்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக, ஆட்டோ ஓட்டுனர் மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் மருத்துவரின் படுகொலை சம்பவத்திற்கு தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
இந்த நிலையில் மதுரை, சேலம், கோவை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல், திருவள்ளூர்,
ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்பு கூடியிருந்த மருத்துவர்கள், கடந்த சில வருடங்களாக மருத்துவர்களின் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இனி மருத்துவர்கள் அச்சமடைய நேரிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணிகள் பாதிப்பு
மருத்துவர்களின் இந்தப் போராட்டம் காரணமாக, மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளும், புற நோயாளிகளும் சிகிச்சை பெற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications