சுகராமுக்கு ‘கோமா’ வாம்- நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொலைதொடர்பு ஊழலில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் கோமா நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் சுக்ராம். இவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஹரியானா தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை வழங்கினார் என்பது புகார்.

இதற்காக சுக்ராம் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது. இதனையடுத்து டெல்லி நீதிமன்றம் சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 4 லட்சம் அபராதமும் விதித்தது.

சுக்ராமுக்கு ‘கோமா’

இந்நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கோரி 84 வயதான சுக்ராம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, சுக்ராமை உடனடியாக சரணடைய உத்தரவிட்டார்.

இதையடுத்து சுக்ராம் சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்த அவரது வக்கீல், சுக்ராம் தற்போது கோமா நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருகுறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

சுக்ராமுடன் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமாராவ் ஆகியோரையும் சரணடையும் படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சரணடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+