பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளத்தை பாதியாக்க குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உலகிலேயே அதிக சம்பளம் வாங்குபவர்கள் சிங்கப்பூர் அரசியல்வாதிகள் தான். இந்நிலையில் அவர்களின் சம்பளத்தை பாதியாகக் குறைக்க அந்நாட்டு பிரதமர் லீ சீன் உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்பளத்தை எவ்வளவு குறைக்கலாம் என்று ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்ககப்பட்டது. அந்த குழு பிரதமரின் சம்பளத்தில் 336 சதவீதம், அதிபருக்கு 51 சதவீதம், அமைச்சர்களுக்கு 37 சதவீதம் வரை குறைக்கலாம் என்று பரிந்துரைத்து தனது அறிக்கையை கடந்த மாதம் 30ம் தேதி பிரதமரிடம் அளித்தது. இதையடுத்து வரும் 16ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும்.
சிங்கப்பூர் பிரதமர் லீ ஆண்டுக்கு 23 லட்சம் டாலர் சம்பளம் வாங்குகிறார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவே வெறும் 4 லட்சம் தான் வாங்குகிறார். லீயின் சம்பளம் குறைக்கப்பட்டாலும் அவர் 17 லட்ம் டாலர் வாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நாட்டில் ஏழை, பணக்கார மக்களிடையே ஏற்பட்ட வித்தியாசம் தான் இந்த திடீர் சம்பள குறைப்புக்கு காரணம்.












Click it and Unblock the Notifications