வரத்து அதிகரிப்பு – கோவில்பட்டியில் பூக்கள் விலை வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

கடந்த வாரம் ரோஜா கிலோ ஒன்றுக்கு ரூ.100லிருந்து ரூ.300 வரை விற்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக ரோஜா கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. இதே போல பிச்சிபூ கிலோ ரூ.100க்கும், செவந்திபூ ரூ.60க்கும், சேவல் பூ ரூ.30க்கும், கேந்திபூ ரூ.15க்கும் விற்கப்படுகிறது.
மல்லிகை விலை உயர்வு
சீசன் இல்லாததால் மல்லிகை பூவின் வரத்து அறவே குறைந்து விட்டது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500 வரை விற்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறாததால் விலை குறைந்துள்ளதாகவும், பொங்கல் பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பூக்களின் விலை உச்சதை தொடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications