வரத்து அதிகரிப்பு – கோவில்பட்டியில் பூக்கள் விலை வீழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

Jasmine
கோவில்பட்டி : பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் கோவில்பட்டி சந்தையில் விலை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகளும், நுகர்வோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சங்கரன்கோவில், கழுகுமலை, நாலாண்டின்புதூர், கடலையூர், வில்லிச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கோவில்பட்டி பூ சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தற்போது இப்பகுதியில் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் ரோஜா, பிச்சிபூ, கேந்திபூ, சேவல்பூ, உள்ளிட்ட பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் குறைந்துள்ளது.
கடந்த வாரம் ரோஜா கிலோ ஒன்றுக்கு ரூ.100லிருந்து ரூ.300 வரை விற்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக ரோஜா கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. இதே போல பிச்சிபூ கிலோ ரூ.100க்கும், செவந்திபூ ரூ.60க்கும், சேவல் பூ ரூ.30க்கும், கேந்திபூ ரூ.15க்கும் விற்கப்படுகிறது.

மல்லிகை விலை உயர்வு

சீசன் இல்லாததால் மல்லிகை பூவின் வரத்து அறவே குறைந்து விட்டது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500 வரை விற்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறாததால் விலை குறைந்துள்ளதாகவும், பொங்கல் பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பூக்களின் விலை உச்சதை தொடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+