டெல்லியில் இன்டர்வியூக்கு வந்த திருமணமான பெண் பலாத்காரம்- இருவருக்கு வலை
டெல்லி: டெல்லியில் வேலைக்கான நேர்காணலின்போது 21 வயது திருமணமான பெண்ணை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள லோனி ரோடைச் சேர்ந்தவர் 21 வயதான தீபா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமானவர். அவர் கடந்த 6ம் தேதி அன்று நொய்டாவிற்கு வேலைக்கான நேர்காணலில் கலந்து கொள்வதற்காக தனது நாத்தனாருடன் சென்றார். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் தீபா மட்டும் நேர்காணல் நடக்கும் அறைக்குள் சென்றார்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் தீபா வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது நாத்தனார் கூச்சலிட்டார். பிறகு தீபாவுடன் அந்த இடத்தைவிட்டு தப்பித்து டெல்லிக்கு சென்றார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து ஷகர்பூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தனர். அதில் வேலைக்கான நேர்காணல் என்ற பெயரில் தீபா சீரழிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து போலீசார் தீபாவை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் தீபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான இடமில்லை என்ற கருத்து உள்ளது. இந்நிலையில் தற்போது நடந்துள்ள சம்பவம் அதை உறுதிபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications