திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழியாக சென்று சாமி கும்பிட்ட நித்தியானந்தா
Subscribe to Oneindia Tamil

நித்தியானந்தா திருநள்ளாறு வந்தார். அங்குள்ள சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த அவரை மக்கள் கூட்டத்தில் சிக்கி விடாமல் இருப்பதற்காக தனி வழியாக கோவில் கட்டளை விசாரணை அதிகாரி கந்தசாமி தம்பிரான் அழைத்துச் சென்றார்.
வழக்கம் போல நித்தியானந்தாவுடன் அவரது ஆண், பெண் சீடர்கள் பலரும் வந்திரந்தனர். அனைவரும் கோவிலுக்குள் சென்று சொர்ண கணபதி, சுப்பிரமணியர், தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர் மற்றும் அம்பாள் சன்னதிகளுக்குச் சென்று சாமி கும்பிட்டனர்.
20 நிமிடங்கள் வரை கோவிலுக்குள் இருந்த நித்தியானந்தா பின்னர் கோவிலை விட்டுக் கிளம்பினார்.
அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் நித்தியானந்தா கோவிலுக்கு வந்து சென்றதால் சற்று சலசலப்பும் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications