அனுமதியின்றி இயங்கிய 20 சாயப்பட்டறைகள் மூடல்- மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
நாமக்கல்: குமாரபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய 20 சாயப்பட்டறைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இயங்க தடைவிதித்து சீல் வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றது. இதில் பல சாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாமல் கழிவுநீரை நேரிடையாக காவிரி ஆற்றில் கலந்து வருகின்றது.
இதனை உடனே தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுக் கொள்ளாமல் இருந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பட்டது. இதனையடுத்து உடனடி நடவடிக்கையில் இறங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத 20 சாயப்பட்டறைகளுக்கு தடை விதித்து சீல் வைத்தனர்.
கரூரில் சாயப்பட்டறை பாய்லர் வெடித்து 7 தொழிலாளர்கள் மரணமடைந்தனர். இதேபோல குமாரபாளையத்தில் சம்பவத்தால் தங்கள் பதவி இழக்க நேரிடும் என்ற பயத்தில் தான் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக, அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications