மகரஜோதிக்குப் பிறகு தமிழர்களை பெருமளவில் தாக்க மலையாளிகள் சதி-உளவுப் பிரிவு

இந்த எச்சரிக்கை குறித்து கேரளாவைச் சேர்ந்த ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேசமயம், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் அதற்கான பதிலடி உடனடியாக தமிழகத்திலும் தரப்படும் சூழல் உள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
மத்திய உளவுப் பிரிவு தகவல் உண்மையாக இருக்கக் கூடும் என்றே நம்பப்படுகிறது. காரணம், சபரிமலைக்குப் போய் விட்டுத் திரும்பும் தமிழக பக்தர்களும் கூட இப்படித்தான் முனுமுனுக்கின்றனர்.
தற்போது தமிழகத்திலிருந்து வரும் பக்தர்களால் பெருமளவில் வியாபாரம் நடக்கிறது. இதை கெடுத்துக் கொள்ள மலையாளிகள் குறிப்பாக வியாபாரிகள் விரும்பவில்லை. ஏற்கனவே பக்தர்கள் வரவு வெகுவாக குறைந்திருப்பதால் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வந்தவரை லாபம் பார்ப்பதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இப்போது கூட கேரளாவுக்குப் போய் விட்டுத் திரும்பும் எந்த ஒரு தமிழ்நாட்டுக்காரரும் மலையாளிகளிடம் திட்டு வாங்காமல் வர முடிவதில்லை. அந்த அளவுக்கு தொடர்ந்து கேவலமாக பேசுவதும், திட்டுவதும், வம்பிழுப்பதும், அடிப்பதும், தாக்குவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
மகரஜோதி முடியட்டும் என்று அங்குள்ளவர்கள் தங்களிடம் எச்சரிக்கை தொணிக்கும் வகையில் கூறுவதாகவும் தமிழக பக்தர்கள் கூறுகிறார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது மிகப் பெரியஅளவிலான தாக்குதலுக்கு அவர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதைத்தான் மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையும் பிரதிபலிக்கிறது.
அதேசமயம், கேரளாவில் தமிழர்கள் மீது பெரும் தாக்குதல் நடந்தால் அதற்கு விரைவான, உடனடியான பதிலடியாக தமிழகத்தில் மலையாளிகளும் தாக்கப்படுவர் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் மலையாளிகளின் வர்த்தக நிறுவனங்கள் மீது மட்டும் தமிழக மக்களில் சிலர் தாக்குதல் நடத்தினர். ஆனால் எந்த ஒரு மலையாளியும் தாக்கப்படவில்லை. மகரஜோதிக்குப் பிறகு தமிழர்கள் பெருமளவில் கேரளாவில் தாக்கப்பட்டால், தமிழகத்திலும் மலையாளிகள் பெருமளவில் தாக்கப்படுவர் என்று உளவுத்துறை தகவல் கூறுகிறாம்.
இந்த தாக்குதல் எண்ணம் இருபக்கமும் இருப்பதால் மகர ஜோதிக்குப் பிறகு என்ன நடக்குமோ என்ற அச்சம் இரு பக்க மக்களிடமும் எழுந்துள்ளது. விபரீதம் நடக்கும் முன்பு கேரள அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழகம் எதிர்பார்க்கிறது. தமிழர்கள் கேரளாவில் தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications