பொங்கல்: பஸ்களில் அதிக கட்டணம் கேட்டால் 044 - 24794709 என்ற எண்ணுக்குப் போன் செய்யலாம்-அரசு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவி்த்துள்ளார்.
தமிழகத்தில் பொஙகல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருவோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று, உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
இது போன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல தனியார் பேருந்துகள் பயண கட்டணத்தை தாறுமாறக உயர்த்தி வசூலிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்படுகின்றது.
இதேபோல அரசு சார்பில் சிறப்பு பேருந்து என்ற பெயரில் இயக்கப்படும் பேருந்துகளிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியது. இது போன்ற குற்ற சம்பவங்கள் வரும் பெங்கல் பண்டிகையின் போது நிச்சயம் தவிர்க்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகதில் உள்ள தொலைபேசி எண் 044 - 24794709 என்ற எண்ணில் மக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications