திருச்செந்தூர் கோயிலில் நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு
திருச்செந்தூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி ஆலயத்தில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பொங்கலை முன்னிட்டு தரிசனம் செய்வதற்காக நெல்லை, பாபநாசம், பாவூர்சத்திரம், தூத்துக்குடி, விருதுநகர், சாத்தூர், அருப்புகோட்டை, கோவில்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
1 மணிக்கு நடைதிறப்பு
தைப்பொங்கலை முன்னிட்டு ஞாயிறுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. இதை தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும் என ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தக்கர் கோட்டை மணிகண்டன், கோயில் இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications