கடலூர், விழுப்புரம் கலெக்டர்கள் உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்
சென்னை : கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு இடவமாற்றம் செய்துள்ளது.இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழக மீன்வளத்துறை இயக்குநர் ராஜேந்திர ரத்னு, கடலூர் மாவட்ட கலெக்டராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த மாவட்ட கலெக்டராக இருந்த அமுதவல்லி, நகராட்சி நிர்வாகத் துறை துணைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் கலெக்டர் மணிமேகலை, கூட்டுறவு, உணவுத்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் தொழில் வெடிமருந்து நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சம்பத், விழுப்புரம் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் என்ற பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன், நில அளவை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது