மும்பை மாநகராட்சியில் 'குப்பை' கொட்டப் போவது யார்?-ரூ. 5000 கோடிக்கு பெட்!
மும்பை: மும்பை மாநகராட்சித் தேர்தலில் யார் வெல்வார்கள், யார் நிர்வாகத்தைக் கைப்பற்றுவார்கள், எந்தக் கட்சி கையில் மும்பை மாநகராட்சி போகும் என்பது குறித்து ரூ. 5000 கோடி அளவுக்கு பெட் கட்டப்பட்டு சூதாட்டம் படு சூதானமாக நடந்து வருகிறதாம்.
முன்பெல்லாம் கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் பெட் கட்டி சூதாடி வந்தார்கள். இப்போது எதற்கெடுத்தாலும் சூதாட்டமாகி விட்டது. ஐஸ்வர்யா ராய்க்கு என்ன பிள்ளை பிறக்கும் என்பதற்குக் கூட பெட் கட்டி பிரமாதப்படுத்தினார்கள். அதை விட காமெடியாக, மும்பையில் இந்த ஆண்டு எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதற்குக் கூட பெட் கட்டி பிரளயத்தை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிலையில் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பெட் கட்டி கலக்குகிறார்களாம். ரூ. 5000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடக்கிறதாம். பிப்ரவரி 16ம் தேதி மும்பை மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
புக்கிகளின் தற்போதைய கருத்துப்படி, எந்தக் கட்சிக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனா மற்றும் இந்திய குடியரசுக் கட்சி ஆகியவை மாநகராட்சியை அடுத்து ஆட்சி செய்யப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகளாக விளங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மும்பை மாநகராட்சியைக் கையில் வைத்துள்ள சிவசேனா மற்றும் பாஜகவுக்கு நிலைமை சாதகமாக இல்லை என்கிறார்கள்.
சிவசேனாவுக்கு 80 சீட்கள் கிடைக்கும் என்று அதிகம் பேர் பெட் கட்டியுள்ளனராம். பாஜகவுக்கு 30 சீட்கள் கிடைக்கும் என்று அதிகம் பேர் கூறியுள்ளனராம்.
மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கு 25 சீட்கள் வரை கிடைக்கும் என்று பலர் பெட் கட்டியுள்ளனராம். மும்பை மாநகராட்சியில் ஆட்சியைப் பிடிக்க தேவையான பெரும்பான்மை பலம் 114 ஆகும்.
அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு 75 முதல் 80 சீட்கள் வரை கிடைக்கும் என்பது புக்கிகளின் கணிப்பாகும். தேசியவாத காங்கிரஸுக்கு 20 கிடைக்கலாம் என்றும் சிவசேனாவுக்கு 75 வரை கிடைக்கலாம் என்றும் பாஜகவுக்கு 25 வரை கிடைக்கலாம் என்றும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கு 15 வரை கிடைக்கலாம் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
மொத்தம் ரூ. 5000 கோடி அளவுக்கு புக்கிங் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications