ஜெய்ப்பூர் இலக்கிய விழா-ருஷ்டி புத்தகத்தை வாசித்த 4 எழுத்தாளர்கள் வெளியேற உத்தரவு!
ஜெய்ப்பூர்: சர்ச்சைக்குரிய சல்மான் ருஷ்டியின் தி சாத்தானிக் வேர்சஸ் என்ற நூலிலிருந்து சில பகுதிகளை வாசித்த நான்கு எழுத்தாளர்களை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவிலிருந்து வெளியேறுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் சர்ச்சை மேலும் வலுவாகியுள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தார் சல்மான் ருஷ்டி. இருப்பினும் அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக ராஜஸ்தான் போலீஸார் கூறியதைத் தொடர்ந்து அவர் தனது பயணத்தை ரத்து செய்தார்.
இந்த நிலையில் தற்போது சல்மான் ருஷ்டி தொடர்பாக இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. இலக்கிய விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் ஹரி குன்ஸ்ரு, அமிதவா குமார், ஜீத் தாயில், ருசிர் ஜோஷி ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று ருஷ்டியின் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை விழாவில் வாசித்தனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தற்போது இந்த நான்கு பேரையும் விழாவிலிருந்து வெளியேறுமாறு அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனராம். அவர்கள் வெளியேற மறுத்தால் கைதுசெய்யப்படலாம் என்றும் பரபரப்பு நிலவுகிறது.
ஜெய்ப்பூர் விழாவில் கலந்து கொண்டுள்ள இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் மத்தியில் ருஷ்டிக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம நிலையில் காணப்படுகிறது. சேத்தன் பகத் கூறுகையில், ருஷ்டி முஸ்லீம் மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார் என்று வர்ணித்துள்ளார். அதேசமயம், தீபக் சோப்ரா என்பவர், சாத்தானிக் வேர்சஸ் நூல் தடை செய்யப்படும் அளவுக்கு மோசமானதல்ல என்று கூறியுள்ளார்.
அதேசமயம், ஜெய்ப்பூர் விழாவுக்கு வந்திருந்த ஓப்ரா வின்பிரேவும் ருஷ்டிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார். புத்தகங்களைத் தடை செய்வதை தான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்று அவர் கூறினார்.
சல்மான் ருஷ்டி விழாவுக்கு வரவில்லை என்ற போதிலும் ஜெய்ப்பூர் விழா தற்போது ருஷ்டியை மையமாக வைத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications