ஸ்டாஃப் செலகஷன் கிரேடு 2 தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 47 பேர் மட்டுமே பங்கேற்பு
நெல்லை: பாளையங்கோட்டையில் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் சார்பில் நடந்த அசிஸ்டண்ட் கிரேட் 2 அதிகாரிகளுக்கான எழுத்து தேர்வில் வெறும் 47 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் ஸ்டாஃப் செலக்ஷன கமிஷன் சார்பில் அசிஸ்டண்ட் கிரேட் 2 அதிகாரிகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் இந்தி டைப்பிஸ்ட்களுக்கான தேர்வு பல இடங்களில் நேற்று நடந்தது. காலை 10 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு வினாத்தாளிலும் 200 கேள்விகள் இடம் பெற்றன.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகேயுள்ள ஒரு பள்ளியில் இந்த தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும் இத்தேர்வுக்காக 257 பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 47 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். பெரும்பாலான இளைஞர்கள் இந்த தேர்வை எழுத ஆர்வம் காட்டவில்லை.












Click it and Unblock the Notifications