கொலையாவதிலிருந்து ரவுடியைக் காக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
சென்னை: சென்னையில் பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக்(35). பிரபல ரவுடி. கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவர், கடந்த 6ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். நேற்று மாலை அவர் நண்பர் ஆல்பர்ட் உடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அவரை 10 பேர் கொண்ட கும்பல் கொலை செய்யும் எண்ணத்துடன் துரத்தியது. கோட்டூர்புரம் அருகே கார்த்திக்கை சுற்றி வளைத்த அந்த கும்பல் அவரை நடுரோட்டியிலேயே வெட்டிக் கொலை செய்தது.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையி்ல் ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ரவுடிகள் பல குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஒரு கோஷ்டியைச் சேர்ந்த முரளி என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கார்த்திக் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கார்த்திக் ஜாமீனில் வெளியே விடுதலையான போது எதிர் தரப்பினர் அவரை கொலை செய்ய வாய்ப்புள்ளது என்று உளவுப் பிரிவு போலீசார் எச்சரித்திருந்தனர்.
ஆனால் இதனை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் ரவுடி கார்த்திக்குக்கு கொலை வழக்கில் ஜாமீன் வழங்கினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எற்படும் என்பதால் போலீசார் முன் எச்சரிக்கையுடன் செயல்படவில்லை.
இதனால் ஜாமீனில் கார்த்திக் வெளியே வந்தவுடன் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்று உளவுப்பிரிவு போலீசார் குற்றம் சாட்டினர். இதனையடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிய எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை சஸ்பெண்டு செய்ய போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications