கொலையாவதிலிருந்து ரவுடியைக் காக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
சென்னை: சென்னையில் பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக்(35). பிரபல ரவுடி. கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவர், கடந்த 6ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். நேற்று மாலை அவர் நண்பர் ஆல்பர்ட் உடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அவரை 10 பேர் கொண்ட கும்பல் கொலை செய்யும் எண்ணத்துடன் துரத்தியது. கோட்டூர்புரம் அருகே கார்த்திக்கை சுற்றி வளைத்த அந்த கும்பல் அவரை நடுரோட்டியிலேயே வெட்டிக் கொலை செய்தது.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையி்ல் ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ரவுடிகள் பல குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஒரு கோஷ்டியைச் சேர்ந்த முரளி என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கார்த்திக் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கார்த்திக் ஜாமீனில் வெளியே விடுதலையான போது எதிர் தரப்பினர் அவரை கொலை செய்ய வாய்ப்புள்ளது என்று உளவுப் பிரிவு போலீசார் எச்சரித்திருந்தனர்.
ஆனால் இதனை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் ரவுடி கார்த்திக்குக்கு கொலை வழக்கில் ஜாமீன் வழங்கினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எற்படும் என்பதால் போலீசார் முன் எச்சரிக்கையுடன் செயல்படவில்லை.
இதனால் ஜாமீனில் கார்த்திக் வெளியே வந்தவுடன் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்று உளவுப்பிரிவு போலீசார் குற்றம் சாட்டினர். இதனையடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிய எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை சஸ்பெண்டு செய்ய போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications