இரும்புத்தாது, நிலக்கரிக்கான ராயல்டியில் மத்திய அரசு வஞ்சம்-ஒரிசா புகார்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்திலிருந்து மத்திய அரசால் வெட்டி எடுக்கப்படும் இரும்புத்தாது மற்றும் நிலக்கரிக்கு உரிய ராயல்டி தொகையை மத்திய அரசு கொடுக்க மறுப்பதாக அம்மாநில ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.

ஒரிசா மாநிலத்தில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியில் ஒரு டன்னுக்கு ரூ75 மட்டுமே தற்போது ராயல்டி வழங்கப்படுகிறது. இதை ரூ176 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது பிஜூ ஜனதா தளத்தின் கோரிக்கை.

நாட்டின் மொத்த அளவில் ஒரிசாவிலிருந்து 96 சவீதம் குரோமேட் தாது, 92 சதவீதம் நைக்கேல் தாது, 65 சதவீதம் கிராபைட், 67 சதவீதம் பாக்சைட், 31 சதவீதம் தாது மணல், 24 சதவீதம் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.

ஒரிசாவின் உண்மை முகம்

"என்ன வளம் இல்லை இத்திருநாட்டில்" என்பதைப் போல் இத்தனை வளம் கொண்ட ஒரிசாவில்தான் மின்சாரத்தை கண்ணால்கூட பார்க்காத பல ஆயிரம் பழங்குடி கிராமங்கள் இருக்கின்றன. வெளி மனிதர்களைக் கண்டாலே தலைதெறித்து ஓடி பதுங்கிக் கொள்கிற 60-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் இருக்கின்றனர். இவர்களில் 18 இனங்கள் திராவிடப் பழங்குடிகள். ஒரிசாவின் பழங்குடி கிராமங்கள் பெரும்பாலானவை இப்போது மாவோயிஸ்டுகளின் கோட்டை.

தமிழ்நாட்டிலும் நெய்வேலி நிலக்கரிக்கும் நரிமணத்து பெட்ரோலுக்கும் கூடுதல் கொடுக்க கோரி போராட்டங்கள் நடந்த காலம் உண்டு. மலைகளையே கொண்ட அசாமில் அரிய பொக்கிஷமாக கிடைத்த பெட்ரோலிய வளத்துக்கு கூடுதல் ராயல்டி கோரி பிறந்ததுதான் பிரிவினை இயக்கமான உல்பா என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+