புதுவை-பெங்களூர் சாலையை சீரமைக்க ரூ.624.2 கோடி நிதி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

Krishnagiri Tindivanam Road
திருவண்ணாமலை: புதுச்சேரி-திருவண்ணாமலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.624.2 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

புதுச்சேரி-பெங்களூர் இடையே உள்ள திண்டிவனம், செஞ்சி திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.66 வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கி்ன்றன. இது தவிர புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், நெய்வேலி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூர், ஓசூர், மும்பை செல்லும் வாகனங்களும் இந்த சாலையைத் தான் பயன்படுத்துகின்றன. இந்த சாலை புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வரை 4 வழிச்சாலையாகவும், அங்கிருந்து கிருஷ்ணகிரி வரை 2 வழிப் பாதையாகவும் உள்ளது.

திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரை உள்ள இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது என்பதால் அதை சீரமைக்குமாறு கடந்த சில ஆண்டுகளாகவே பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இது குறித்த மனுவை திருவண்ணாமலை எம்.பி. த.வேணுகோபால் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் கமல்நாத்திடம் கொடுத்தார்.

இதையடுத்து திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரையுள்ள 182 கி.மீ. தூர சாலையை சர்வதேச தரத்தில் போட ரூ.624.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்குகிறது. இந்த பணியின் ஒரு பகுதியாக செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, மாத்தூர், கன்னடஹள்ளி ஆகிய ஊர்களில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் திட்ட இயக்குநர் வரதராஜன் கூறியதாவது,

இந்த சாலைகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்படும். சாலைகள் அமைக்கத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி விரைவில் முடிந்துவிடும். வரும் பிப்ரவரி மாதத்தில் சாலை போடும் பணிகளைத் துவங்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும்.

9 புறவழிச்சாலைகள் அமைப்படுகின்றது. இதனால் எந்த ஊரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. தற்போது குண்டும், குழியுமாக உள்ள பகுதிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றது என்றார்.

தற்போது திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள் திருவண்ணாமலை நகருக்குள் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. புதியதாக அமைக்கப்படும் புறவழிச்சாலை திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் இருந்து நல்லவன்பாளையம் வழியாக அத்தியந்தல் கிராமத்தில் முடியும் வகையில் அமைக்கப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+