குடியரசு தினம்-டெல்லியில் கொடியேற்றினார் பிரதீபா பாட்டீல்-கண்கவர் அணிவகுப்பு!

முன்னதாக இன்று காலை அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மலர் வளையம் வைத்து மறைந்த படையினருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் விழா நடந்த ராஜ்பாத்திற்கு வந்து சேர்ந்தார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வந்து சேர்ந்தார். அவருடன் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினரான இந்தோனேசியாவின் முதல் பெண் பிரதமரான இன்லுக் ஷினாவாத்ராவும் உடன் வந்தார்.
இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். அதன் பின்னர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அசோக் சக்ரா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. அசோக் சக்ரா விருது, வீர மரணம் எய்திய லெப்டினென்ட் நவ்தீப் சிங்குக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலின்போது தனது உயிரை நீத்தவர் நவ்தீப் சிங். மரணத்திற்கு முன்பு நான்கு தீவிரவாதிகளை வேட்டையாடியவர் நவ்தீப் சிங்.
விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் அணிவகுப்பு தொடங்கியது. ராணுவம், கடற்படை மற்றும் வி்மானப்படை ஆகிய முப்படைகளின் அணிவகுப்பு முதலில் நடைபெற்றது. இந்தியாவின் படை பலத்தை பறை சாற்றும் ஆயுத அணிவகுப்பும் இடம் பெற்றது.












Click it and Unblock the Notifications