திவாகரனுக்குச் சொந்தமான மகளிர் கல்லூரி முதல்வரிடம் போலீஸ் விசாரணை

மிரட்டல் மற்றும் நில மோசடி வழக்கில் சிக்கியுள்ளார் திவாகரன். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
திவாகரனைப் பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீஸார், சசிகலா, நடராஜன், இளவரசி ஆகியோரின் உறவினர்கள் அத்தனை பேரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார்குடியில் உள்ள செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி முதல்வர் அமுதாவைப் பிடித்து விசாரணை நடத்தினர். இந்தக் கல்லூரி திவாகரனின் தாயார் கிருஷ்ணவேணி நிறுவியதாகும். இதன் நிர்வாக டிரஸ்டியாக திவாகரன் செயல்பட்டு வருகிறார்.
2 வாரங்களுக்கு முன்பு இந்தக் கல்லூரியில் நடந்த நிகழச்சியில் திவாகரன் பங்கேற்றிருந்தார். இதையடுத்து முதல்வர் அமுதாவை மன்னார்குடி போலீஸார் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவரிடம் திவாகரன் எங்கிருக்கிறார் என்பது குறித்து போலீஸார் விசாரித்ததாக தெரிகிறது.
திவாகரன் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 31ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதற்குள் அவரைக் கைது செய்ய போலீஸார் தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications