குடியரசு தினவிழா-நெல்லையில் தீவிர கண்காணிப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா நடக்கும் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் இன்று காலை 8 மணிக்கு கலெக்டர் செல்வராஜ் தேசியக்கொடி ஏற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. வஉசி மைதானம் முழுவதும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மைதானத்தை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னரே மைதானத்திற்குள் பார்வையாளர்கள் இன்று அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உததரவுப்படி துணை கமிஷனர் ஜெயபாலன் அறிவுரைப்படி உதவி கமிஷனர்கள், இன்ஸபெக்டர்கள் மேற்பார்வையில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே நிலையம், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவது்ம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+