கேரளாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை: காங். எம்பியே கூறுகிறார்
வேலூர்: கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மற்றும் பீர்மேடு ஆகிய தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஆரூண் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட தேசிய கிருஸ்துவப் பேரவை சார்பில் முல்லைப் பெரியாறு அணை குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. வேலூரில் நடந்த இக் கருத்தரங்கில் பங்கேற்ற ஆரூண் நிருபர்களிடம் பேசுகையில்,
இங்கிலாந்தைச் சேர்ந்த பென்னி குயிக் இந்தியாவின் கடைக் கோடியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டும்போது தனது சொத்துக்களையெல்லாம் விற்று 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமாக இருந்தார்.
இந்த அணையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த அணை உடையவும் உடையாது, அதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனால் அந்த அணை உடைந்து விடும் என்றும் எனவே வேறு அணையை கட்ட வேண்டும் என்பது கேரளாவின் திட்டமிட்ட பொய்ப் பிரசாரமாகும்.
முல்லை பெரியாறு பிரச்சனையை நான் கண்டு கொள்ளவே இல்லை என்பது தவறு. நான் அடிக்கடி எனது தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து வருபவன்.
கேரளாவில் உள்ள இடுக்கி மற்றும் பீர்மேடு பகுதியில் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். எனவே அவர்களிடம் இந்தப் பகுதியை தமிழ்நாட்டுடன் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் கேரள மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர் என்றார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications