தமிழக அரசின் இளம்பெண் அறிவியலார் விருது: 7 பேர் தேர்வு
சென்னை: தமிழக அரசின் இளம்பெண் அறிவியலார் விருது 7 பேருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது ஒருவருக்கும் இன்று வழங்கப்படுகிறது.
தமிழக அரசு பெண் விஞ்ஞானிகளை கவுரவிக்கும் விதத்தில் தமிழ்நாடு இளம்பெண் அறிவியலார் விருதினையும், வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு உயர்கல்வி துறைகளில் சிறப்பாக செயலாற்றும் பெண்களுக்கு வழங்கி வருகிறது.
ரூ.20,000 ரொக்கம் மற்றும் சான்றிதழுடன் கூடிய இந்த விருது வேளாண்மை அறிவியல், சுற்றுச்சூழல் விஞ்ஞானம் சார்ந்த 7 துறைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி டாக்டர்.கங்கா ராதாகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகின்றது.
2010ம் ஆண்டுக்கான இளம்பெண் அறிவியலார் விருது பெறுபவர்கள் விவரம் வருமாறு,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் டாக்டர் மரகதம்,
அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர் டாக்டர் எஸ்.மலர்விழி,
பெரம்பலூர் பருத்தி ஆய்வக துணை பேராசிரியர் டாக்டர் ஷீரின் ஜெனிதா ராஜம்மாள்,
பெரியார் பல்கலைக்கழக துணை பேராசியர் டாக்டர் டி.பூங்கொடி விஜயகுமார்,
அழகப்பன் பல்கலைக்கழக துணை பேராசியர் டாக்டர் கே.பாண்டிமாதேவி,
அண்ணா பல்கலைக்கழக கணிதப்பிரிவு துணை பேராசியர் டாக்டர் விமலா மணிவாசகம்,
சவிதா பல்கலைக்கழக வேதியல் துறை துணை பேராசிரியர் டாக்டர் கே.உதயலட்சுமி
இந்த விருது இன்று (27 ம் தேதி) காந்திமண்டபம் சாலையில் உள்ள அண்ணா ஜெம் சயின்ஸ் பார்க் பள்ளியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அறிவியல் விழா- 2012 ஐ துவக்கி வைத்து இந்த விருதுகளை வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications