ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரி மாற்றம்-வங்கிக் கொள்ளை நடந்த துரைப்பாக்கத்திற்கு ஏசி ஆனார்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வந்த டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு துரைப்பாக்கம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையில் இடம் பெற்றிருந்தவர் பாலசுப்பிரமணியம். டி.எஸ்.பியான இவர் தற்போது திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
துரைப்பாக்கம் உதவி ஆணையராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் துரைப்பாக்கத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் துணிகரமான முறையில் பட்டப் பகலில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் படையில் இடம் பெற்றிருந்த டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் இங்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் பாதுகாப்புப் படை டிஎஸ்பியாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் எஸ்.பியும் மாற்றம்
இதேபோல சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கோட்னிஸ் அஸ்வின் முகுந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புனித தாமஸ் மலை காவல் துணை ஆணையராக ஏ.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி. எஸ்.பியாக எம்.எஸ். முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளர் மாற்றம்
இதேபோல வருவாய்த்துறை செயலாளராக இருந்து வந்த ராஜகோபால் மாற்றப்பட்டு உள்துறைச் செயலாளராகியுள்ளார்.
இதுவரை உள்துறைச் செயலாளராக இருந்து வந்த ரமேஷ் ராம் மிஸ்ரா வருவாய்த்துறைக்குச் செயலாளராகியுள்ளார்.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications