பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் மேலும் இருவர் சரண் !
மேட்டுப்பாளையம் : பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று சரண் அடைந்தனர்.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன், கடந்த 10 -ந் தேதி அன்று திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12 -ந்தேதி அன்று நெல்லை மாவட்டம் இடையர்தவணையை சேர்ந்த ஆறுமுகச்சாமி, தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காட்டை சேர்ந்த அருளானந்தம் ஆகியோர் வள்ளியூர் நீதி மன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராஜபாளையம் அருகே உள்ள மூகவூரைச் சேர்ந்த செல்வம் என்ற புறா மாடசாமி, மற்றும் பிரபு ஆகிய இருவரும் மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை கோவை மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இதனையடுத்து அவர்களை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நான்கு பேர் சரண் அடைந்த நிலையிலும் பசுபதிபாண்டின் கொலை வழக்கில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்ந்தபாடு இல்லை என்று பரவலான தகவல்கள் உள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications