நில மோசடி வழக்கு: ஆந்திர உள்துறை முதன்மை செயலாளர் கைது
ஹைதராபாத்: நில மோசடி வழக்கில் ஆந்திர உள்துறை முதன்மை செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பிபி ஆச்சார்யாவை சிபிஐ இன்று கைது செய்தது.
ஆந்திர அரசால் நடத்தப்படும் ஆந்திர பிரதேஷ் தொழில் உள்கட்டமைப்பு கழகம்(ஏபிஐஐசி) மற்றும் துபாயைச் சேர்ந்த எமார் நிறுவனமும் சேர்ந்து ஹைதராபாத்தின் மணிகொண்டாவில் வில்லாக்கள், அபார்ட்மெண்ட்கள் கட்டியது. அப்போது நில மோசடி நடந்ததாகவும், வில்லாக்கள் மற்றும் அபார்ட்மெண்ட்கள் விற்பனை செய்யப்பட்டதிலும் மோசடி நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அவை கட்டியபோது ஏபிஐஐசியின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் ஆச்சார்யா.
இது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை ந்டத்தி வருகின்றது. முதல் தகவல் அறிக்கையில் ஆச்சார்யாவின் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக அவரது வீட்டில் ரெய்டு நடந்தது. இந்நிலையில் இன்று ஆச்சார்யா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் கடப்பா எம்.பி. ஜகன்மோகன் ரெட்டியின் ஆதராவளர் சுனில் ரெட்டி என்பவரும், இன்னொருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications