நெல்லை தாக்குதல் எதிரொலி: கூடங்குளம் அணு உலை முற்றுகை!
Subscribe to Oneindia Tamil

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசு அமைத்துள்ள குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி காட்டுத் தீயாக பரவியது.
இதனால் கூடங்குளம், இடிந்தகரை, உவரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேவாலய மணி அடிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்று திரண்டனர்.
தாக்குதலுக்குள்ளான போராட்டக் குழுவினரும் கூடங்குளம் நோக்கி விரைந்தனர். இந்நிலையில் அணு உலையை 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு பொராட்டம் நடத்தினர்.
இதனால் கூடங்குளத்தில் பேருந்து உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கூடங்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவுவதால் பெருமளவிலான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications