கருணாநிதி தலைமையில் திமுக உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் முக்கிய விவாதம்

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள், வைக்கப்பட்ட விவாதங்களுக்கு நாளை பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவுள்ளது.
கூட்டத்திற்கு கட்சித் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், தி.மு.க. அமைப்புகளுக்கான 14-வது பொதுத்தேர்தல், அமைப்பு முறை தொடர்பான சட்ட திட்டத் திருத்தங்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு, புதுப்பித்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
அதேசமயமம், அதிமுக, தேமுதிக இடையே மூண்டுள்ள புதிய யுத்தம் தொடர்பாக எழுந்துள்ள புதிய அரசியல் சூழல் குறித்தும் இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று விஜயகாந்த்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக வெளிநடப்புச் செய்தது நினைவிருக்கலாம். எனவே விஜயகாந்த் குறித்து நிச்சயம் பேசப்பட்டதாக நம்பப்படுகிறது.
நேற்று விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று சொல்வது தவறு என்று சுட்டிக் காட்டியது நினைவிருக்கலாம். எனவே இது திமுகவினர் மத்தியில் ஒரு சின்ன பிளாஷ் லைட் அடித்துள்ளது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூடுகிறது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், தணிக்கைக் குழு அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில் அன்பழகன், மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, பொன்முடி,வேலு, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications