பரூக் மறைவு அனுசரிப்புக்கு முன்பே அரசு நிகழ்ச்சியில் சாண்டி பங்கேற்றதால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் பரூக் மரைக்காயர் மறைவையொட்டி 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாநில முதல்வர் உம்மன்சாண்டி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில ஆளுநராக இருந்த பரூக் மரைக்காயர் கடந்த மாதம் 26ம் தேதி காலமானார். இதற்காக ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அதுவரை அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் கேரள அரசு அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டடன.

இந்நிலையில் மாநில முதல்வர் உம்மன்சாண்டியும், அமைச்சர்களும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2 அரசு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் கனக்குன்னு அரண்மனை, நிஷாகந்தி அரங்கத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் உம்மன்சாண்டி, அமைச்சர்கள் குஞ்சாலிக்குட்டி, முனீர், சிவகுமார் கலந்து கொண்டனர்.

7 நாள் தூக்கம் நேற்று மாலைதான் முடிந்தது. அதற்கு முன்பாக அரசு நிகழ்ச்சிகளை நடத்தி அதில் முதல்வர் உம்மன்சாண்டியும், அமைச்சர்களும் கலந்து கொண்டது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+