தடையை மீறி குற்றால அருவியில் சோப்பு, ஷாம்பு போட்டுக் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

ஏழைகளின் ஊட்டி என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் தென்தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் மே, ஜூ்ன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரை சீசன் களைகட்டும். இந்த 3 மாதங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து மூலிகை கலந்து வரும் அருவி நீரில் நீராடிச் செல்வது வழக்கம்.
தமிழகத்தின் வடமாவட்ட சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து ஆயில் மசாஜ் எடுப்பது வழக்கம். மேலும் குற்றால சீசன் காலத்திலும், சபரிமலை சீசன் காலத்திலும் குற்றாலம் பேரூராட்சி பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க பல கோடி ரூபாய்க்கு ஏலம் போவதுண்டு.
அப்படி ஏலம் எடுக்கும் சிறு வியாபாரிகள் கடைகளில் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை சாரம் சாரமாக விற்பனை செய்வர். ஆனால் கடந்த மாதம் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் குற்றாலம் பேரூரவி நீர் புனித நீர் என்பதால் அருவியில் குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அத்தீர்மானம் பிப்ரவரி 2ம் தேதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பேரூராட்சி சார்பில் வியாபாரிகளை அழைத்துப் பேசாமல் அருவிக்கரை பகுதியில் மட்டும் போர்டு வைத்துள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி 2ம் தேதியான இன்று அருவியில் நீராடும் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் சோப்பு, ஷாம்பு உபயோகித்துதான் குளித்த வண்ணம் உள்ளனர். கடைகளில் சோம்பு, ஷாம்பு, சீக்காய் போன்ற பொருட்களின் வியாபாரமும் நடந்த வண்ணம் உள்ளது.












Click it and Unblock the Notifications