மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்-கட்டணத்தைக் குறைத்த தனியார் பேருந்துகள்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் கட்டணம் குறைக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் தனியார் பேருந்துகளில் கட்டணமாக ரூ.9 வசூலிக்க வேண்டும். ஆனால், அரசு விரைவு பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணமான ரூ.13 வசூலிக்கப்பட்டு வந்தது.
இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரியிடமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் கொடுத்திருந்தனர்.
இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மெளனம் சாதித்தே வந்தது. இதனைக் கண்டித்து வேடசந்துரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூடுதல் கட்டண வசூலிப்பை தனியார் பேருந்துகள் கைவிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications