விமான நிறுவனங்கள் நேரடியாக எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி

இதன்மூலம் எரிபொருளுக்கான வரி குறைவதோடு, அதன் விலையும் குறையும். இது விமான நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும்.
இந்தக் கோரிக்கையை நெடுங்காலமாகவே விமான நிறுவனங்கள் முன் வைத்து வந்தன. இந் நிலையில் இன்று நடந்த விமானத்துறைக்கான அமைச்சரவை குழு கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங்,
விமானப் போகுவரத்து நிறுவனங்கள் நேரடியாக விமான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ளலாம்.
அதே போல ஏர் இந்தியா கட்டணங்களை திருத்தியமைக்கவும் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
இன்றைய கூட்டத்தில் அமைச்சரவை குழுவில் உள்ளவர்கள் தவிர உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலிய துறை அமைச்சர் எஸ்;ஜெய்பால் ரெட்டி, வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்ட குழு துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications