மணல் கடத்தல் கும்பலுக்கு துணை போன எஸ்.ஐ. சஸ்பெண்ட்: தர்மபுரி எஸ்.பி. அதிரடி

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: மணல் கடத்தல் கும்பலுக்கு துணை போன எஸ்.ஐ. ஒருவரை தர்மபுரி எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் உள்ள ஆற்றில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தனர். இது குறித்த தகவல் அறிந்த வருவாய்த் துறையினர்
அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் டிராக்டர்களில் மணல் கடத்தி வந்தனர். அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டவுடன் வாகனங்களுடன் தப்பிக்க முயன்றனர். ஆனால் ஒரு டிராக்டரை மட்டும் வருவாய்த் துறையினர் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பஞ்சப்பள்ளி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் பற்றி தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அமீத்குமார் சிங்கிடம் புகார் கொடுக்கப்பட்டது.

உடனே அவர் மணல் கடத்தல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+