மதுரை அருகே கிணற்றுக்குள் பாய்ந்த வேன்: 10 பேர் பலியான பரிதாபம்

தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர், சதீசுவரன். இவர் சென்னையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியை சேர்ந்த சித்திரைவேல்-முருகம்மாள் தம்பதியின் மகள் உமா என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப்பின் மணமக்களை, பெண்ணின் உறவினர்கள் தேவாரத்தில் உள்ள மணமகனின் வீட்டில் கொண்டு விடுவதற்காக ஒரு வேனில் தேவாரத்திற்கு சென்றனர். அங்கு மணமக்களை மணமகன் வீட்டில் விட்டபின் அனைவரும் அந்த வேனில் தூத்துக்குடிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
வேன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக திருமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தது.
நக்கலக்கோட்டை அருகே இரவு 7 மணி அளவில் வந்தபோது நிலைதடுமாறிய வேன் அருகே உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது.
இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் தண்ணீருக்குள் மூழ்கினார்கள். வேன் கிணற்றுக்குள் விழுந்தபோது ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டும், வேனில் இருந்தவர்களின் மரண ஓலத்தை கேட்டும் நக்கலக்கோட்டை கிராம மக்கள் அங்கு ஓடிவந்தனர்.
கிணற்றுக்குள் 3 பேர் தத்தளித்துக்கொண்டு இருந்ததை பார்த்த வாலிபர்கள் கிணற்றுக்குள் குதித்து அந்த 3 பேரை மீட்டனர். அவர்களில் ஒருவர் விருதுநகர் நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் ராஜாக்கனியின் மகன் மாதவன், மணி, சாயல்குடியை சேர்ந்த கருப்புச்சாமி என்று தெரியவந்தது.
கிணற்றின் அருகே மின்விளக்கு வசதியும் இல்லாததால் அங்கிருந்தவர்கள் டார்ச்லைட், மண்எண்ணை விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கை கொண்டு வந்தனர்.
அதற்குள் தீயணைப்பு படையினரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி வேனுக்குள் இருப்பவர்களை மீட்க போராடினர்.
அந்த கிணறு 50 அடி ஆழ கிணறாக இருந்தது. அதில் 25 அடிக்கும் அதிகமாக தண்ணீர் இருந்ததாலும், இருளாக இருந்ததாலும் தீயணைப்பு படையினரின் மீட்பு பணியிலும் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டன.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications