8 மணி நேர மின்தடை: அரிசி ஆலைகள் முடக்கம்- அரிசி விலை மேலும் உயரும்

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் விவசாயத்திற்கு அடுத்து நெல், அரிசி வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் இயங்குகின்றன. இங்கு அரவை செய்யப்படும் அரிசி தமிழகம் மட்டுமின்றி கேரளாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இத்தொழிலில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது இப்பகுதியில் தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் அரிசி ஆலைகளால் முழுமையாக செயல்பட முடியவில்லை. மின்தடை இல்லாத நேரங்களில் ஒரு மில்லில் 200 மூடைகள் வரை அரிசி அரவை செய்யப்பட்டது. ஆனால் மின்தடையால் தற்போது 40 முதல் 50 மூடைகள் மட்டுமே அரவை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அரிசி வழங்க முடியவில்லை. மேலும் தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்க முடியவில்லை.
தற்போது இப்பகுதியில் நெல் அறுவடை துவங்கி உள்ள நிலையில் மின்தடை காரணமாக ஆலைகள் சரிவர இயங்காததால் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதனால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரிசி விலை மேலும் உயரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications