கர்நாடக ஆபாச பட அமைச்சர்கள் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூர் வழக்கறிஞர் தர்மபால்கவுடா மனுவை ஏற்று பெருநகர நீதிமன்ற நீதிபதி கிரன் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்களான லட்சுமண், சி.சி.பாட்டீல், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது பிப்ரவரி 27ம் தேதிக்குள் வழக்கு பதிவு செய்ய நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

விதான்சவுதா போலீஸ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கு என்ன?

நாட்டையே அதிர்ச்சியில் உறையச் செய்த சம்பவம் கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வாரம் நடந்தேறியது. இந்த மூன்று அமைச்சர்களும் கர்நாடக சட்டப்பேரவையில் அமர்ந்து கொண்டே தங்களது செல்போன்களில் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்த காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மூவரும் பதவி விலகினார்கள். ஆனால் மூவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடகத்தில் வலுத்துள்ளது. இந்த நிலையில்தான் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+