ஏட்டய்யா கை ரொம்ப நீளம்...மாணவனிடம் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மாணவரிடம் லஞ்சம் வாங்கிய மதுரை அண்ணா நகர் காவல்நிலைய ஏட்டு சிவக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அண்ணாநகர் பகுதியில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பள்ளி மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

தமது பெண் நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறிய அவனை மிரட்டி ரூ 1000 லஞ்சம் வாங்கியுள்ளார். இந்த தகவல் மதுரை மாநகர ஆணையாளர் கண்ணப்பனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு துணை ஆணையாளர் ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டார். ஏட்டு சிவக்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மாணவனிடம் லஞ்சம் வாங்கியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார் ஏட்டு சிவக்குமார்.

இதனையடுத்து, ஏட்டு சிவக்குமாரை சஸ்பென்ட் செய்து மதுரை காவல் ஆணையாளர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+