விருதுநகர் வந்த ஸ்டாலினுக்கு 'ஷாக்'-ஒன்றிய திமுக சேர்மன் அதிமுகவுக்குத் தாவினார்!
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தி.மு.க. சேர்மன் வாசுதேவன் அதிமுக-வில் ஐக்கியமானார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விருதுநகருக்கு வந்த நேரத்தில் இந்த தாவல் நடந்துள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தி.மு.க. சேர்மனாக இருப்பவர் வாசுதேவன். உள்ளாட்சி தேர்தலில் ஆத்திபட்டி கவுன்சிலராக சுயேச்சையாக வெற்றி பெற்றார். அதன் பின்பு, ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர், இவருக்கு மாற்றி வாக்களித்து வெற்றி பெறச் செய்ததால், இவர் மீது மற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனால், இவருக்கு ஒன்றியக் குழு கூட்டத்தில் சரிவர ஒத்துழைப்புக் கொடுக்காதாதல், கூட்டம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 3 தினங்களுக்கு முன்பு நடைபெற இருந்த ஒன்றியக் குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது,
கடந்த ஒருவார காலமாக தலைமறைவாக இருந்த வாசுதேவன், திடீரென முதலவர் ஜெயலிலதா தலைமையில் போயஸ் கார்டனில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
விருதுநகர் மாவட்டதிற்கு இளைஞர் பொறுப்பாளர் தேர்வுக்கு, நேர்காணல் நடத்த மு.க. ஸ்டாலின் சென்ற நிலையில் தி.மு.க. சேர்மேன் வாசுதேவன் அ.தி.மு.க.-வில் இணைந்தது தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications