ஈரோடு மேயர் மல்லிகாவின் உறவினர் நகைக்காகப் படுகொலை!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு அதிமுக மேயர் மல்லிகா பரமசிவத்தின் உறவினர் ஒருவர் நகைக்காக படுகொலை செய்யப்பட்ட செயல் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு, செங்கோடம்பள்ளம் என்ற இடத்தில் ஹாலோ பிளாக் செங்கல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தவர் ரத்தினம். இவர் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவத்தின் உறவினர் ஆவார்.

அவர் இன்று தனது செங்கல் விற்பனை நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கும்பல் அவர் அணிந்திருந்த 8 பவுன் நகைகளை திருடிக் கொண்டு தப்பி விட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை நடத்தினார். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேயரின் உறவினரே பட்டப் பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+