14 மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர்கள் அதிரடி மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கான அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். புதுப் பொலிவுடன் கூடியதாக, 'ஜெயலலிதா அணி'யைச் சேர்ந்தவர்களாகப் பார்த்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
வட சென்னை வடக்கு பிரேமா-தென் சென்னை வடக்கு சரஸ்வதி
வடசென்னை ஆர்.கே., நகர் பகுதி இணைச் செயலர் பிரேமா, தென்சென்னை சைதாப்பேட்டை பகுதி இணைச் செயலர் வத்சலா, திருவள்ளூர் புழல் ஒன்றிய மகளிர் அணி செயலர் பாத்திமா பீவி, வேலூர் பொதுக்குழு உறுப்பினர் பவானி கருணாகரன், திருப்பூர் பல்லடம் நகர மகளிர் அணி செயலர் சித்ராதேவி ஆகியோர், அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
வடசென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக பிரேமா, வடசென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலராக சாந்தி, தென்சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, தென்சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலராக வத்சலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் கிழக்குக்கு வாசுகி-மத்திக்கு கணிதா சம்பத்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக வாசுகி, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலராக கணிதா சம்பத் எம்.எல்.ஏ ., காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலராக வசந்தா மணி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக சாந்தி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலராக பாத்திமா பீவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் புறநகருக்கு சுகன்யா-திருப்பூருக்கு ஜெகதாம்பாள்
வேலூர் மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலராக சுகன்யா மோகன்ராம், வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக பவானி கருணாகரன், திருப்பூர் மாவட்ட மகளிர் அணி செயலராக ஜெகதாம்பாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகருக்கு சித்ரா தேவி-நெல்லை புறநகர் வடக்குக்கு குமுதா
திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலராக சித்ராதேவி, அரியலூர் மாவட்ட மகளிர் அணி செயலராக ஜீவா அரங்கநாதன், பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி செயலராக ராஜேஸ்வரி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலராக ஜெயராணி, திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக குமுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் கூண்டோடு தூக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications