தடையில்லாமல் கரண்ட் கொடுங்க, போதும்-இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: மக்கள் விலையில்லாப் பொருட்களை விரும்பவில்லை. தடையில்லாமல் மின்சாரத்தை கொடுக்க மட்டுமே வேண்டுகின்றனர் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

கும்பகோணம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மக்கள் விலையில்லா பொருட்களை விரும்பவில்லை. தடையில்லா மின்சாரத்தை மட்டுமே விரும்புகின்றனர். மின்சார தட்டுப்பாடு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை, விவசாயம் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்படாமல் 8 மணி முதல் 9 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது. ஆனால் கிராமப்புறங்களில் 16 மணி நேரம் மின்சாரம் தடைபட்டுள்ளது.

மின்வெட்டை கண்டித்து போராடுபவர்கள் மீது தடியடி நடத்தக்கூடாது. இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+